News March 16, 2024

ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 3, 2025

திருச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (நவ.4) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லால்குடி ஒன்றியம் ஜெங்கமராஜபுரம் பகுதியிலும், துறையூர் ஒன்றியம் ரங்கநாதபுரம் பகுதியிலும், முசிறி ஒன்றியம் ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஒன்றியம் கருப்பூர் பகுதியிலும் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

image

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!