News October 5, 2024
இந்தியர்களை இஸ்ரேல் அனுப்பும் அரசு?: கார்கே

போருக்கு மத்தியில், சுமார் 15,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு முயன்று வருவதாக கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கான ஆட்சேர்ப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இது மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள வேலையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு முன் பல இந்தியர்கள் வேலைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
5,180 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

SBI வங்கியில் காலியாக உள்ள 5,180 Junior Associates (கிளார்க்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல். தேர்வுக் கட்டணம்: ₹750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News August 13, 2025
M.A. பகவத் கீதை படிக்க தயாரா?

M.A. பகவத் கீதை படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய கலாசாரத்தை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டப்படிப்பை கற்பதன் வழியாக தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன், சமூக அரசியல் அம்சங்களை மாணவர்கள் அறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News August 13, 2025
உரிமைத் தொகை.. ஆகஸ்ட் 28ல் காத்திருக்கும் குட் நியூஸ்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற விவரத்தையும் விரைவில் அரசு வெளியிடுமாம். SHARE IT.