News October 5, 2024
இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா?

இந்தியாவில் 79% குடும்பங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய பொருட்கள் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகளை சீனா கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளதாக லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், ட்ரோன்கள், CCTV கேமராக்களை தீவிரமாக கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 29, 2025
ராசி பலன்கள் (29.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஆதாயம் ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – ஆதரவு ➤ மகரம் – பரிசு ➤ கும்பம் – நிம்மதி ➤ மீனம் – உயர்வு.
News August 29, 2025
சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.
News August 28, 2025
Xiaomi-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஆப்பிள், சாம்சங்

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் Xiaomi நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. விளம்பரங்களில் தங்களது தயாரிப்புகளை கொச்சைப்படுத்துவதை உடனே நிறுத்த அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில், ஐபோன் 16 புரோ மேக்ஸ் கேமரா, Xiaomi 15 அல்ட்ரா கேமராவை விஞ்சும் என நினைப்பவர்களுக்கு ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள் என Xiaomi விளம்பரம் வெளியிட்டது. அதேபோல் சாம்சங்கை தாக்கியும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.