News March 16, 2024
அனுதாப ராணி என அழைத்தார்கள்

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
Similar News
News July 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 388 ▶குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ▶பொருள்: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
News July 6, 2025
ஹீரோவாகும் இயக்குநர்கள்.. ரசிகர்கள் கவலை..!

பார்த்திபன், சேரன், சுந்தர் சி, சசிகுமார் என தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோவாவது புதிய விசயமல்ல. ஆனால் நல்ல திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவர்கள் அதன்பிறகு இயக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. நடிகர்களாகிவிட்ட பின் மீண்டும் அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சேரன், GVM, சசிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களை ரொம்ப மிஸ் பண்றோம் இல்லையா?
News July 6, 2025
430 ரன்கள்: டீம் ஸ்கோர் இல்லை, கில் ஸ்கோர்..!

இந்தியா – இங்கி., இடையே 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 430 ரன்கள் அடித்துள்ளார். SENA நாடுகளுக்கு சென்று ஒரு ஆசிய கேப்டன் ஒரே போட்டியில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதல்முறை. மேலும் இந்தியாவுக்காக ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவரும் தற்போது இவர் தான். கவாஸ்கர்(344), விவிஎஸ் லக்ஷம்ன்(340), சவுரவ் கங்குலி (330) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.