News October 5, 2024
இளைஞருக்கு 25ஆண்டுகள் சிறை

கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மகிளா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருவாரூர் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (32). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் ஊர்நல அலுவலர் கலைவாணி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அருள்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
மன்னார்குடியில் சாலை மறியல் அறிவிப்பு

மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எள், பருத்தி, உளுந்து, போன்றவற்றிற்கு காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து செப்.16-ந் தேதி மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்.பி வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவல் விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.