News March 16, 2024

மீனவர் குடும்பத்திற்கு எம்.பி நேரில் சென்று ஆறுதல் கூறினார்

image

காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

Similar News

News October 23, 2025

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

புதுச்சேரி: புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், இத்துறை தொழில்நுட்ப பிரச்சினையை நிவர்த்தி செய்து வருகிறது. எனவே, விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

புதுச்சேரி: கனமழை பாதிப்புகள் குறித்து தகவல்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2 நாட்களில் புதுச்சேரியில் 21 செ.மீ. மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய பாதிப்பு குறித்து துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர் என்றார்.

error: Content is protected !!