News October 5, 2024
PM KISAN: வங்கிக்கணக்கில் இன்று பணம்

PM கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ₹2,000 வீதம் ஆண்டுக்கு ₹6,000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 18வது தவணை இன்று (அக்.5) வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. eKYC நிறைவு செய்யாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. eKYCயை pmkisan.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Similar News
News August 13, 2025
மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.
News August 13, 2025
நகை கடன் எந்த இடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.
News August 13, 2025
அதிகமாக Reels பாக்குறீங்களா.. உஷார் மக்களே!

இன்ஸ்டா, யூடியூப்பில் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்தானது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது நினைவாற்றல், கவனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறதாம். டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழகிவிடுகிறது. இதனால், எந்த விஷயத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.