News October 4, 2024

மனைவியை வெட்டிய கணவர் கைது

image

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் ராஜேஷ் கடந்த 1ஆம் தேதி இரவு மனைவியை அருவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். லால்குடி போலீசார் கொலை செய்த ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருந்த ராஜேஷை லால்குடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 18, 2025

திருச்சி மக்களே சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க.

News August 18, 2025

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் ஆக.22ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

திருச்சி – பாலக்காடு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

image

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் இருகூர், சிங்காநல்லூர் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (ஆக.18) முதல் திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் மேற்குறிப்பிட்ட நிறுத்தங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!