News March 16, 2024
தி.மலை: பங்கு மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.54க்கு தொடங்கி, மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 3, 2025
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் நோக்கம், பேரிடரின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகும்.
News September 2, 2025
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
News September 2, 2025
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, உடனடியாக மனுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.