News October 4, 2024
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை

கடந்த 4 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். நிதி ஒதுக்காததால் சர்வ சிக்ஷா திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டிய அவர், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News August 16, 2025
ரோஹித், கோலியை நீக்கக் கூடாது: ரெய்னா

டெஸ்ட், டி20-களில் ஓய்வறிவித்த ரோஹித், விராட் ODI-யில் மட்டுமே இனி விளையாடவுள்ளனர். இந்நிலையில் 2027 ODI உலகக்கோப்பை அணியில் அவர்கள் இடம்பெறுவது சிரமம் என பல மூத்த வீரர்கள் கருத்து கூறுகின்றனர். இதுபற்றி பேசிய ரெய்னா, ரோஹித் மற்றும் விராட் அனுபவம் அணிக்கு முக்கியமானது, ஆதலால் அணியில் இடம்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், ஜூனியர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அணியில் இருப்பது அவசியமென்றார்.
News August 16, 2025
DMKவில் இணையும் தம்பிதுரை? சற்றுநேரத்தில் விளக்கம்

OPS, TTV விவகாரத்தில் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தம்பிதுரையை EPS கடிந்து கொண்டார். இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அதற்கு அவரது தரப்பில் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு இனி தமிழகத்தில் கிடுக்குப்பிடி?

பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ரீல்ஸ் அதிகமாகிவிட்டது. இதனைக் கண்காணிக்கும் சைபர் பிரிவு, சிலருக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதிக்கிறது. இந்நிலையில், இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் பதிவுகளை தடுக்கவும், நீக்கவும் கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் கூறியுள்ளார். கடிவாளம் போடப்படுமா?