News October 4, 2024
திருச்சி டைடல் பார்க் கட்டுமானத்திற்கு டெண்டர்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடி மதிப்பில், 5.58 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள இந்த டைடல் பார்க்கை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு. மேலும் இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யவும்
Similar News
News August 20, 2025
திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <