News October 4, 2024
ஏகாம்பரநாதர் கோயிலில் மோசடி: விசாரணை வேண்டும்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 2015ஆம் ஆண்டில் செய்யப்பட்ட உற்சவர் சிலையில் மோசடி நடந்ததால், அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். 2017ஆம் ஆண்டில், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. எனவே, விரைவில் விசாரணை தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 22, 2025
உழைக்காமல் பலன் பெற நினைப்பது ஊழல்: இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் நேற்று இபிஎஸ் பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதில் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பகுதியில் உரையாற்றிய போது, விஜய் ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல, ஆனால் இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல் என கடுமையாக குற்றம் சாட்டினர்.
News August 22, 2025
காஞ்சிபுரம்: VAO, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dspkpmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 044-27237139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் 10th, 12th முடித்தாலே வேலை

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஆக.23) நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.