News October 4, 2024

கடலூரில் பிரபல ரவுடி குண்டாஸில் கைது

image

புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த தாடி அய்யனார் (30) மீது புதுச்சேரி மங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. மேலும் இவர் மீது புதுச்சேரி மாநிலம் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 21 வழக்குகள் உள்ளது. இதனால் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் தாடி அய்யனார் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 12, 2025

கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News November 12, 2025

கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

image

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!