News March 16, 2024
திருச்சி: மரங்களை நட்ட அமைச்சர்!

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News September 22, 2025
திருச்சி மக்களே உள்ளூரில் அரசு வேலை

திருச்சி மக்களே..! IIM Trichy-யில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅நிறுவனம்: Indian Institute of Management Tiruchirappalli
✅பணி: பல்வேறு
✅கல்வி தகுதி: டிகிரி மற்றும் பணிக்கேற்ப
✅சம்பளம்: ரூ.25,500 –ரூ.1,42,400
✅மேலும் விவரங்களுக்கு: <
✅கடைசி தேதி: 21.10.2025
✅ வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 22, 2025
திருச்சி: நவராத்திரியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

லால்குடி தாலுகா, ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்க்கை வித்தியாசமாக கோரைப் பற்கள் வெளியே தெரியுமாறு காட்சி தருகிறார். இங்குள்ள அம்மனுக்கு நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், பெண்களுக்கு திருமண வரன் உடனடியாக கைகூடும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News September 22, 2025
திருச்சி: 16 வயது சிறுமி கர்ப்பம்; கொடூர மாமன் கைது

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட காரணத்தால், தனது பெரியப்பா மகளுடன் சிறுமி தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்காவின் கணவர் சாமுவேல் (30) என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதையடுத்து புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் சாமுவேலை போக்ஸோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.