News October 3, 2024
5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து

புதிதாக 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா செம்மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 10, 2025
பாக்சிங் ரிங்கில் பலியான 2 வீரர்கள்… சோகம்!

ஜப்பானில் பாக்சிங் போட்டியில் 2 வீரர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2-ம் தேதி நடந்த ஒரு போட்டியில், ஷிகெடொஷி கொட்டாரி(28) என்ற வீரர் 12 ரவுண்டுகள் நீடித்த கடுமையான போட்டியில் காயமடைந்து உயிரிழந்தார். அடுத்த நாள் மற்றொரு போட்டியில் ஹிரோமசா உரகாவா(28) என்ற வீரர் அடிப்பட்டு இறந்தார். இந்த இருவருமே தலையில் அடிப்பட்டு மூளை காயமடைந்ததால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP
News August 10, 2025
நாளை வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிப்பார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
தூக்கம் அவசியம். ஏன் தெரியுமா?

தினசரி குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் *உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும் *மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும் *நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் *உடல் எடை அதிகரிப்பை தடுக்கும் *படிப்பு, வேலைகளில் கவனக்குவிப்பை, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் *இதயநோய் வரும் ஆபத்தை குறைக்கும்.