News October 3, 2024
போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டு சிறை

கமுதி கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பத்மாஸ்வரம் (25 ). கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, பத்மாஸ்வரத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
Similar News
News August 28, 2025
BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 27, 2025
இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க