News October 3, 2024
கடலூர் எஸ்பி அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்

குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி உமா (40). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த சோமு என்பவர் தன்னை தாக்கியதாகவும், இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மதியம் 1 மணி அளவில் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News November 12, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <


