News March 16, 2024

பெரம்பலூர்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

image

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாடி எனும் குக்கிராமம் பெரம்பலூருக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வழித் தடம் இல்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று(மார்ச் 16) பாலாம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு புதிய போக்குவரத்து வழித்தடத்தை எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

Similar News

News August 8, 2025

பெரம்பலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

பெரம்பலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து விண்ணபிக்கலாம்<<>>. SHARE IT NOW…

News August 8, 2025

பாடாலூர் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் சாமிநாதன் (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு ஆளான சாமிநாதனை அவரது மனைவி கார்த்திகா பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 8, 2025

பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது<> https://pgportal.gov.in/<<>> என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!