News March 16, 2024

வதந்திகள் சவாலாக உள்ளன

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வதந்திகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்சிகள் தொடர்பாகவோ, வேட்பாளர்கள் தொடர்பாகவோ விமர்சனம் செய்யலாம், ஆனால் பொய் செய்திகளை பரப்பக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொய் செய்திகள் குறித்து அவ்வப்போது விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.

Similar News

News April 24, 2025

குடும்பமே உயிர்தப்பிய சம்பவம்; கல்மா என்றால் என்ன?

image

‘மற்றவர்களுடன் நானும் கல்மா சொன்னதால் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது’ என பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய அசாம் பல்கலை பேராசிரியர் தேபாசிஷ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். கல்மா என்பது அல்லாஹ் ஒருவரே கடவுள் என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் முழுமையான நம்பிக்கை கொள்வதாகும். இந்த கல்மாவில் மொத்தம் 6 வகைகள் உள்ளன.

News April 24, 2025

இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன!

image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இருநாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்தும், ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை ரத்து செய்துள்ளன. மறுபுறம், குடியரசுத் தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்.-ஐ எப்படி பழிவாங்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

News April 24, 2025

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?

image

1971 போரை நிறுத்தும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16202618>>சிம்லா ஒப்பந்தம்<<>> போடப்பட்டது. இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதே சிம்லா ஒப்பந்தம். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தானின் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

error: Content is protected !!