News March 16, 2024
நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.
Similar News
News January 20, 2026
நீலகிரியில் பயங்கரம்.. ஒருவர் அடித்துக் கொலை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பமூலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாரங்கமூலா பழங்குடியின கிராமத்தில் கோபி என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். டிஎஸ்பி கல்யாண் குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த விசாரணையில், இறந்தவரின் தங்கை மகன் சுதீஷ் என்பவர் மதுபானம் வாங்க பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் தாக்கி கோபியை கொன்றுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News January 20, 2026
நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 20, 2026
நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை விழலையா?

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


