News March 16, 2024
திருச்சி: குட்கா விற்ற 3 பேர் கைது

திருவெறும்பூர் பள்ளி அருகே நேற்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக பென்னி சேவியர், முருகேசன், ஜான் தனபால் ஆகிய 3 பேரை திருச்சி எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய 1 கார்,12 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்று இவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 8, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.86 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்தது, முன் பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு உயர்தர வகுப்புகளில் பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் எடுத்து செல்வது உள்ளிட்ட வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ.86,30,076 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 8, 2025
திருச்சி: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

திருச்சி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
திருச்சி: ஆதிதிராவிட, பழங்குடியினர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியை சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பொது நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.