News March 16, 2024
அரக்கோணம்: மின்சாரம் தாக்கி பெண் பலி!

அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டையை சேர்ந்தவர் ரமீசா(38). இவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், இன்று கட்டுமான பணிக்காக தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, மின் கம்பியில் தண்ணீர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் ரமீசா காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். இருப்பினும் வழியிலேயே ரமீசா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
ராணிப்பேட்டை: கடன் பிரச்சனை இருக்கிறதா…? உடனே இங்கு போங்க

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் பிரசித்தி பெற்ற ஜலநாதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொழில் தொடங்க நினைப்பவர்களும் இங்கு வந்து தரிசித்தால் தொழில் வெற்றி அடையும் என்பது ஐதீகம். கடனில் இருந்து மீள உங்க நண்பர்களுக்கு பகிரவும்.
News August 8, 2025
ராணிப்பேட்டையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!
News August 8, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் போதைப்பொருள் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை
ஒரு தவறான பாதை, உங்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனவும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!