News March 16, 2024
தஞ்சை அருகே கார் டயர் வெடித்து ஒருவர் பலி

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 31, 2025
தஞ்சை: ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்

ஒரத்தநாட்டை அடுத்த தெற்குகோட்டை ராஜாமடம் கிளை ஆற்றில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர் யார்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 31, 2025
தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
தஞ்சை: ரயிலில் அடிபட்டு பெண் பலி

பூதலூர் ரயில் நிலையத்தில் நேற்று ஜன்சதாப்தி விரைவு ரயிலில் பெண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்தவர் பூதலூர் சையதுகுட்டி காலனியைச் சேர்ந்த பர்ஜானாபத்ருல்ஜாமல் (35) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


