News March 16, 2024
அரியலூர்: மகனால் தம்பதியினர் தற்கொலை!

அரியலூர் நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
அரியலூர்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ஆகஸ்ட் 9) தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. எனவே பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
அரியலூர்: அரசு பேருந்துகள் குறித்த புகார் எண்

அரியலூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் (0435- 2403724-26) தெரிவிக்கலாம். இதில் காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 7, 2025
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க!