News March 16, 2024

தருமபுரி: வனத்துறை முக்கிய அறிவிப்பு

image

கோடை காலம் தொடங்கிவிட்டதால், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வன சாலைகளை பயன்படுத்துவோர் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் காட்டிற்குள் தீ வைக்கும் நபர்களை வனத்துறையில் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.06) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News November 6, 2025

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

தருமபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

தருமபுரி: விவசாயிகளுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த தருமபுரி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (07.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!