News March 16, 2024
இன்று முதல் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள் (2)

4. பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். 5. 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. 6.அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது. 7. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது. 8. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.
Similar News
News October 23, 2025
ஒற்றை அறிவிப்பால் ₹13.15 லட்சம் கோடி இழப்பு

கூகுள் குரோமிற்கு மாற்றாக ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ எனும் Browser-ஐ OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒற்றை அறிவிப்பால் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ன் சந்தை மதிப்பு ₹13.15 லட்சம் கோடி சரிந்துள்ளது. முழுவதும் AI-ஆல் வடிவமைக்கப்பட்ட அதிநவீன Browser ஆக ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குரோமிற்கு போட்டிய ‘COMET’ Browser-ஐ Perplexity AI அறிமுகப்படுத்தியது.
News October 22, 2025
‘டியூட்’ பட சர்ச்சைகளுக்கு இயக்குநர் விளக்கம்

‘டியூட்’ படத்தின் கிளைமாக்ஸில் வரும் ஒரு வசனம், பிரதீப் ரங்கநாதன் சொல்லியதால் சேர்த்ததாக அப்படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். நெல்லை கவின் ஆணவ கொலைக்கு பின்னரே அந்த வசனம் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தாலி தொடர்பான சர்ச்சை காட்சிகளுக்கு விளக்கம் அளித்த அவர், தமிழ்நாட்டில் பெரியவர் (பெரியார்) சொன்ன வழியில் தான் பயணித்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
புதிய டிஜிபி நியமனம்: EPS-க்கு அமைச்சர் பதிலடி

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக விமர்சித்த EPS-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அடாவடித்தனத்தாலே புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், எத்தனையோ ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதை மறந்து EPS பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசுக்கு நெருக்கமானவர்களை டிஜிபியாக நியமிக்கவே தாமதப்படுத்துவதாக அவர் விமர்சித்து இருந்தார்.