News October 2, 2024

கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, சாலை மற்றும் பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (அக்.1) நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 4, 2025

தென்காசி கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் (11.10.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

தென்காசி: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா??

image

தென்காசி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்யுங்க. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கண்விழி கைரேகை தேவையில்லை. உங்க வீட்டுக்கே ஆதார் கார்டு வந்துடும்.SHARE பண்ணுங்க.

News October 4, 2025

தென்காசி: கனிமவளம் லாரி மோதி ஒருவர் பலி

image

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை அம்மன் கோவில் அருகே கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி சாலையில் நடந்து சென்ற திருமலை கோவில் சாலையை சார்ந்த மாரிமுத்து என்பவர் தலை நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.

error: Content is protected !!