News March 16, 2024
புளியந்தோப்பு: ரூ.8.84 கோடியில் சிறுவர் பூங்கா

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News January 18, 2026
தஞ்சை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
தஞ்சாவூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News January 18, 2026
தஞ்சாவூர்: ரயில் மோதி முதியவர் பலி

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 70 வயதுடைய முதியவர், திருச்சி – காரைக்கால் சரக்கு ரயில் மோதி பலியானார். அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


