News March 16, 2024
வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு

85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்தம் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதினை நிரம்பப் பெற்றவர்களாக உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது நிரம்பியிருந்தால் அவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 28, 2025
BREAKING: உயிரிழந்தோர் உடல்களுக்கு ஸ்டாலின் அஞ்சலி

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் கரூர் மருத்துவமனையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் சென்ற ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
News September 28, 2025
விஜய்யை கைது செய்யுங்கள்: நடிகை ஓவியா

விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ARREST VIJAY’ என பதிவிட்டுள்ளார். ‘அமாம் விஜயை கைது செய்ய வேண்டும்.. விஜய்யை மட்டும் குற்றம்சாட்டுவது தவறு..’ என ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News September 28, 2025
கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.