News March 16, 2024

வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு

image

85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்தம் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதினை நிரம்பப் பெற்றவர்களாக உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது நிரம்பியிருந்தால் அவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

தமிழகத்தை உலுக்கிய கொலை.. முக்கிய திருப்பம்

image

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக் கொலையில் முக்கிய திருப்பமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் தந்தை சரவணன், சகோதரர் சுர்ஜித் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 13, 2025

கூகுள் குரோமுக்கு ₹2.88 லட்சம் கோடி விலை

image

₹2.88 லட்சம் கோடி கொடுத்து கூகுள் குரோமை வாங்க Perplexity AI முன்வந்துள்ளது. ஆன்லைன் Browsing-ல் Monoply செய்ததாக எழுந்த புகாரில், குரோம் பிரவுசரை விற்க அமெரிக்க கோர்ட் உத்தரவிட்ட நிலையில், Perplexity AI இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஆஃபரை ஏற்காமல், கூகுள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோர் குரோமை பயன்படுத்துகின்றனர்.

News August 13, 2025

தவெகவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர்..

image

சுதந்திர தினத்தன்று கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடியரசு தினத்தன்று தேநீர் விருந்துக்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, விஜய் புறக்கணித்தார். இம்முறை செல்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!