News March 16, 2024
அரக்கோணம் அருகே மோப்ப நாய்களுக்கு பயிற்சி

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Similar News
News October 23, 2025
ராணிப்பேட்டையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
ராணிப்பேட்டை மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்டம் மழைக்காலங்களில் புயல் அடடித்தால், மின் கம்பிகள் அருந்து விழுந்தால் அல்லது மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடப்பதை பார்த்தாலோ உடனடியாக ராணிப்பேட்டை மின்துறை உதவி எண்களை தொடர்ந்து தங்கள் புகாரை அழிக்கலாம். அதன்படி 9487899841,9487899842, 9487899843,9487899844, 9498794887 ஆகிய எண்களை 24 நேரமும் தொடர்பு கொள்ளவும்.
News October 23, 2025
ராணிப்பேட்டை: குறைந்த விலையில் வாகனம் வாங்கணுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. அக்.30ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நான்கு இரு சக்கர வாகனங்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. விவரங்களுக்கு ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை அணுகலாம் என்று எஸ் பி அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார்