News March 16, 2024
பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Similar News
News January 12, 2026
பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
பெரம்பலூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 12, 2026
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், மாதாந்திர திறனாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி உரையாற்றிய போது, இனி மாவட்டத்தில் கர்ப்பக்கால மரணங்கள் எந்தவொரு மருத்துவமனைகளில் நிகழாதவாறு, கர்ப்பிணி பெண்களை பேணி காத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சையுடன் கூடிய வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.


