News October 1, 2024
சிவகிரியில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கிய இருவர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரியில் புதிய மின் இணைப்பு பெற 5000 ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மின் ஊழியர் மருது பாண்டி ஆகிய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மின் இணைப்பு தர 35,000 லஞ்சம் கேட்டுள்ளார் உதவி மின்பொறியாளர் முத்துக்குமார்.
Similar News
News October 4, 2025
தென்காசி கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் (11.10.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
தென்காசி: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா??

தென்காசி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <
News October 4, 2025
தென்காசி: கனிமவளம் லாரி மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை அம்மன் கோவில் அருகே கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி சாலையில் நடந்து சென்ற திருமலை கோவில் சாலையை சார்ந்த மாரிமுத்து என்பவர் தலை நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.