News March 16, 2024
தி.மலை: மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் A.A.ஆறுமுகம் இன்று (16.03.2024) வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி, உதவி தலைமை ஆசிரியர் மு. சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 8, 2025
தி.மலை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழ்நாட்டிற்கு 380 காலிப்பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். <
News August 8, 2025
திருவண்ணாமலை தலைமை ஆசிரியருக்கு விருது

திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமையில் 26 பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வழி வகித்ததால் சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பெற்றுக் கொண்டார். மேலும் இது போன்ற சேவைகளை செய்து மாணவர்களை வழிநடத்த வேண்டுமென்று கூறினார்கள். ஆசிரியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிகிறது.
News August 8, 2025
தி.மலை கிரிவல பாதையில் குழந்தைகளுக்கான டிராலி வாடகை

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள், குழந்தைகளைத் தூக்கிச் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, புதிய டிராலி வாடகை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14 கி.மீ. கிரிவலப் பாதையில், ரூ.300 செலுத்தி இந்த டிராலியைப் பயன்படுத்தலாம். இதன்மூலம், பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அதில் அமர வைத்து, எளிதாகவும், இனிமையாகவும் கிரிவலம் செல்ல முடியும். இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.