News October 1, 2024
ஆன்லைன் மோசடி கும்பல்: சைபர் கிரைம் எஸ்.பி. உத்தரவு

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி. கலைவாணன் நேற்று கூறியதாவது: உங்கள் வங்கி கணக்கை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம், உங்கள் வங்கி கணக்கிற்கு எவ்வளவு பணம் வருகிறதோ அதற்கு இரண்டு சதவீதம் கமிஷன் தருகிறோம் என்று யாரும் உங்களுடைய வங்கி கணக்கை கேட்டால் கொடுக்க வேண்டாம். பெரும்பாலும் இணைய வழி மோசடிக்காரர்கள் இதுபோன்று மற்றவர்களுடைய வங்கிக் கணக்கை மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெற பயன்படுத்துகின்றனர் என்றார்.
Similar News
News September 14, 2025
புதுவை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள்!

தெலுங்கான மாநிலம் கச்சிகுடாவில் இருந்து புதுவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில், போலீசார் ரெயில் பெட்டிகளை சோதனை செய்த போது சாக்கு பை ஒன்று கிடந்தது. போலீசார் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News September 14, 2025
புதுவை: கூடுதல் விலையில் மது விற்ற கடைகளுக்கு அபராதம்

புதுவை கலால்துறை துணை ஆணையரும், எடையளவு துறை கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேத்யூ பிரான்சிஸ் தலைமையில், அதிகாரிகள் புதுவை நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுவையில் உள்ள 10 மதுக்கடைகளில் கூடு தல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாண்லே பால் அதிக விலைக்கு விற்ற 2 மளிகை கடைகளுக்கு ரு.2500 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 14, 2025
புதுவை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <