News October 1, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கள்ளச்சாரயம் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (30.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 19, 2025

தி.மலை அருகே விபத்து

image

தி.மலை, அமர்நாத்புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் திருமணத்திற்கு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க பைக்கில் செல்வராஜ், பச்சையம்மாள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது கலசபாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில் பச்சையம்மாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2025

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆக-19) நடைபெறும் இடங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று, சொத்து வரி, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் இந்த முகாமில் பெறலாம்.

News August 18, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-18) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!