News March 16, 2024
புதுச்சேரியில் மே 1 முதல் விடுமுறை

புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே.1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
புதுவை: சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

மெகபூ பாஷா என்ற சட்டக் கல்லூரி மாணவர் கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் தனது உறவினரின் சூப் கடையில் பகுதி நேர வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சூப் கடைக்கு வந்த வைத்திக்குப்பம் கடவுள், தேவா, கண்ணன் ஆகியோர் பீப் பக்கோடா கேட்டனர். அதற்கு மெகபூ பாஷா சற்று காத்திருக்க கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மெகபூ பாஷாவை சரமாரியாக தாக்கினர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்
News November 7, 2025
புதுவை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மோர்சார் தெரு, குட்டவாப்பு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
புதுச்சேரி: வனக்காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பு

புதுச்சேரி அரசின் தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சவுகான் தெரிவித்துள்ளார்.


