News March 16, 2024

உதகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72  உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

நீலகிரி: தோட்டப் பயிர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தோட்ட பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எலுமிச்சை, ரம்புட்டான், ஆரஞ்சு, அவகோடா போன்ற மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றவும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் கேரட்,பீட்ரூட், உருளை, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.93,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News October 31, 2025

நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!