News September 30, 2024

போக்குவரத்து விதிகளை மீறியதாக 342 வழக்கு பதிவு

image

நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் நேற்று(செப்.29) ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது என விதிகளை மீறிய வாகனங்கள் மீது 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 19, 2025

காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

image

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 19, 2025

குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

image

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்புக்கு – 7904715820, 8270865957. வேலை தேடும் இளைஞர்களுக்காக உடனே SHARE பண்ணுங்க.

News August 19, 2025

குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!