News March 16, 2024
திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 139 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 6, 2025
திருவாரூர்: தேனீ பயிற்சி முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பயிற்சியினை திடீர் ஆய்வு செய்தார். பயிற்சியாளர் களிடம் பயிற்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்.
News November 6, 2025
திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


