News September 30, 2024
BREAKING: 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 11, 2025
ஜெ., போட்டோவுடன் இருந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

ஜெயலலிதாவை போல அரசியலில் ஆளுமை மிக்க பெண் என்ற எண்ணத்திலேயே <<17369072>>LK சுதீஷ், ஜெ.,வுடன் சேர்த்து<<>> தனது போட்டோவை பகிர்ந்ததாக பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் தனது அரசியல் ரோல் மாடல் ஜெயலலிதாதான் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், இதனை கூட்டணியுடன் முடிச்சி போட வேண்டாம் என்றார். காலையில், அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைந்ததை மறைமுகமாக கூறவே சுதீஷ் இந்த போட்டோவை பகிர்ந்ததாக பேச்சு எழுந்தது.
News August 11, 2025
கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. நெருக்கடியில் ஹர்திக்?

Asia cup-ல் VC-யாக கில் நியமிக்கப்படுவது, ஹர்திக் பாண்ட்யாவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சூர்யகுமார் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவருக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இத்தொடரில் சொதப்பினால், சூர்யகுமார் கேப்டனாகவும், கில் VC-யாகவும் நியமிக்கப்படலாம். இது ஹர்திக்குக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கலாம்.
News August 11, 2025
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை என்ன?

‘மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற பெயரில் ஆக.1 முதல் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: *மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். *10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். *மாநகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.