News September 30, 2024

நகராட்சியாட்சியாக தரம் உயர்கிறது கோத்தகிரி

image

கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான தீர்மானம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அருகிலுள்ள 4 கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊட்டி மாநகராட்சியாக தரம் உயரும் நிலையில், கோத்தகிரி நகராட்சியாக மாறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 15, 2025

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள, காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., இன்று மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், உதகை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

News August 15, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 கால அவகாசம் நீட்டிப்பு!

image

தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிக்கான கால அவகாசம் வருகின்ற 20.8.2025 மாலை 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்ய விரும்புவர்கள் பதிவு செய்யலாம். என நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.

News August 15, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச பயிற்சி!

image

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!