News September 30, 2024

டோல்கேட்டை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம்: காங்கிரஸ்

image

நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 டோல்கேட் உள்ளதால் இதனை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன்குமார் நேற்று(செப்.,29) அறிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News August 18, 2025

முன்னாள் இராணுவ வீரர்களின் குறை தீர்க்கும் நாள்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

News August 18, 2025

நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில்..!

image

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!