News March 16, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
செங்கல்பட்டு: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி ரயில்வே அட்டவணையில் மாற்றம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு(செப்டம்பர் 27), சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய விடுமுறை தினம் என்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பயணிகள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News August 26, 2025
சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

துரைப்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (29) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி நசீமா பானு இத்தீர்ப்பை நேற்று வழங்கினார்.