News March 16, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
விழுப்புரம்: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

விழுப்புரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 23, 2026
விழுப்புரம்: விழிப்புணர்வு மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஜன.22 திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன்,மாதிரி வாக்கு செலுத்தும் முறையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
News January 23, 2026
விழுப்புரம்: தீயில் உடல் கருகி பலி

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் எலுமிச்சை பழ வியாபாரம் செய்து வந்த தனலட்சுமி (68), நேற்று வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


