News March 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 68 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Similar News

News November 7, 2025

நாமக்கல்: இளம் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்!

image

நாமக்கல்: புதுச்சத்திரம், சர்க்கார் நாட்டாமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம் (56). இவரது மகள் ஸ்ரீவர்சினி (22) மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றியவர். இவர் வீட்டில் வீல் சேரில்தான் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (60), ஸ்ரீவர்சினிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜரத்தினம் புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாஜலத்தை தேடி வருகின்றனர்.

News November 7, 2025

கொல்லிமலையில் அறிமுக கலை வகுப்புகள் தொடக்கம்!

image

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் விரிவாக்க மையம் கொல்லிமலை குழந்தைகளுக்கான அறிமுக கலை பயிற்சி வகுப்பு, கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கத்தில் நவம்பர் மாதம் முழுவதும், அனைத்து சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!