News March 16, 2024
தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 305 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News September 23, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.22) இரவு 10 மணி முதல் இன்று(செப்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
தஞ்சாவூர் மக்களே உஷார்; வெளுக்க போகும் மழை

தஞ்சாவூர் மக்களே இன்று (செப்.22) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!
News September 22, 2025
தஞ்சை: நவராத்திரியில் செல்ல வேண்டிய கோவில்கள்!

கண்டியூர் கிழக்கே உள்ள திருவேதிக்குடியில் பிரசித்தி பெற்ற வேதபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம். கூடுதலாக இங்குள்ள மூலவரை நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், திருமண வரன், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!