News March 16, 2024

விருதுநகர் அருகே மதுவால் ஏற்பட்ட விபரீதம் 

image

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா. மணிகண்டன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (15.3.24) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 23, 2025

சிவகாசியில் தடையை மீறி தொடரும் பட்டாசு விற்பனை

image

சிவகாசியில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை, விளம்பரத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்து மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் இந்த உத்தரவை மீறி ஏராளமான பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News September 22, 2025

BREAKING விருதுநகர்: உதயநிதி ஸ்டாலின் வருகையில் மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு வருகை தர இருந்தார். இந்நிலையில் ஒரு சில காரணங்களுக்காக அவரது வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் நாளை காலை விருதுநகர் வரும் துணை முதல்வருக்கு மதுரை – விருதுநகர் நெடுஞ்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மற்ற நிகழ்ச்சிகளில் மாற்றம் ஏதும் இல்லை.

News September 22, 2025

விருதுநகர் பட்டாசு விபத்தில் அதிர்ச்சி தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் 2011 – 2024 வரை 14 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் 379 பேர் உயிரிழந்த நிலையில் 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில், 2012-ம் ஆண்டு செப்.5 முதலிபட்டி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!