News March 16, 2024
“இப்பவும் நான் தான் ஒருங்கிணைப்பாளர்”

அதிமுக ஒருங்கிணைப்பாளராக 2025 டிச.26 வரை தொடர்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது. 2022 ஜூன் 28ஆம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிசாமி விலகிவிட்டார். எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைப்பாளரான தான் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வரவுள்ளது.
Similar News
News October 20, 2025
ஆபரேஷன் Sindoor 2.0; தயாராக இருக்கும் இந்தியா

இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி உறுதிப்படுத்தியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறிய அவர், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளார். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர்தான் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
News October 20, 2025
திமுக தலைமை அலுவலகத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக CM ஸ்டாலின், EPS, ராமதாஸ், ரஜினி, விஜய் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளது.
News October 20, 2025
மீண்டும் இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை எனில் இந்தியா மீது மேலும் வரிகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக, ரஷ்ய எண்ணெய்யை வாங்கமாட்டேன் என PM மோடி சொன்னதாக டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு, நாட்டு மக்களின் நலனே முக்கியம் என கூறி, மறுப்பு தெரிவித்து அவரது மூக்கை உடைத்தது இந்தியா. இதனால் கடுப்பான டிரம்ப் தற்போது இந்தியாவை மீண்டும் சீண்டி பார்த்துள்ளார்.