News March 16, 2024
அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.
Similar News
News November 4, 2025
பிரபல நடிகை காலமானார்

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் லாட் (89) காலமானார். ‘Alice Doesn’t Live Here Anymore’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘Wild at Heart’ (1990), ‘Rambling Rose’ (1991) திரைப்படங்களுக்காக அவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கள் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 4, 2025
ED மூலம் அச்சுறுத்தும் பாஜக: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை எதிர்த்து யார் பேசினாலும், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கே.என்.நேரு உண்மையிலேயே உழல் செய்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ED-யை பாஜக பயன்படுத்துவதாக சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, மக்களிடம் தங்களுக்கு ஆதரவை தேடும் தகிடுதத்தம் வேலை இது என விமர்சித்தார்.
News November 4, 2025
கோவை கல்லூரி மாணவி வழக்கில் அடுத்த அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சுட்டுப்பிடித்த 3 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் மூவரும் ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


