News September 28, 2024
13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி நாங்குநேரி அருகே ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதியில் ராணுவ அதிகாரிகளை பார்த்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். தகவல் அறிந்த விஜயநாராயணம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் பதிவானது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அவரை இன்று அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
Similar News
News November 16, 2025
39969 பேரின் எஸ்ஐஆர் விவரம் பதிவேற்றம் – கலெக்டர் தகவல்

நெல்லையில் 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு
வீடாகச் சென்று எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை வழங்குகின்றனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,18,325ல் 13,36,667 பேருக்கு (94.2%) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் மூலம் நிரப்பிய படிவங்களை பெற்று ஆப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதுவரை 39,969 பேரின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.
News November 15, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT.
News November 15, 2025
நெல்லை: பைக் திருட்டு.. தவெக நிர்வாகி கைது!

விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்க ராஜா என்பதும் இன்று தெரிய வந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது மாட்டிக்கொண்டனர்.


